1. நாற்று       வாடல் : ப்யுசேரியம் ஸ்பீசியஸ், சொலட்டோட்ரைக்கம் ஸ்பீசியம் மற்றும் ரைசோக்டோனியா 
               
              அறிகுறிகள்:         
              
                
                  - நாற்று அழுகல்       அதிகமாக நாற்றங்கால்களில் தென்படும். இதனால் 5-40% நாற்று இறப்பு ஏற்படும். தாக்கப்பட்ட       நாற்றுக்களின் இலைகள் இயற்கை துளிர்வை இழந்து, வாடி பின் இறந்துவிடும்
 
                  - நாற்றின் வேர்த்தொகுதி       மற்றும் கழுத்துப்பட்டை பகுதிகளில் தரங்கள் மாறி காணப்படும். இவைகள் நிறம் மாறி       அழுகிவிடும்
 
                 
               
              கட்டுப்பாடு: 
              
                
                  - தாக்கப்பட்ட நாற்றுக்கள்       நோய்களை பரப்பும். இதை அகற்றி நாற்றுகளை அழித்துவிட வேண்டும். பின் 0.25% காப்பர்       ஆக்ஸில்க்ளோரைடை நாற்றங்கால்களை சொட்டு சொட்டாக நனைக்கவும்
 
                 
               
              2.இலை       அழுகல் : சிலின்ட்ரோக்ளேடியம் க்வின்குவி செப்டேட்டம் 
                 
                அறிகுறிகள் 
              
                
                  - இளம் மற்றும்       முதிர்ந்த பருவத்தில் நாற்றங்கால் மற்றும் முக்கிய வயல்களில் இந்நோய் தென்படும்
 
                  - விளிம்புகளில்       முதலில் தாக்குதல் கரும்புள்ளிகள் போன்று தோன்றும். பின் இது சில சமயங்களில்       எந்தவித தெளிவான அமைப்புகளும் இல்லாமல் பரவும்
 
                  - முழு இலைகளிலும்       அழுகல் தோன்றும் அல்லது இலைகளின் நுனியில் தோன்றும் பின் உதிர்ந்துவிடும்
 
                 
               
              கட்டுப்பாடு: 
              
                
                  - 0.1% கார்பன்டாசிம்       பூச்சிக்கொல்லியை நாற்று மற்றும் இளம் இலைகளில் தெளிக்கவும்
 
                 
               
              3. கடைசி       புள்ளி, கொம்பு கருகல் மற்றும் பூ மொட்டு உதிர்தல் : க்ளியோஜ்பேரியம் க்ளியோஜ்போரியாட்ஸ் 
               அறிகுறிகள்: 
              
                
                  - இலைகளில் காய்ந்த       புள்ளிகளின் அளவு மற்றும் வடிவங்கள் வேறுபடும்
 
                  - திடமாக தாக்கப்படும்       இலைகள் வாடி வதங்கி காய்ந்துவிடும்
 
                  - நாற்றங்கால் நாற்றுக்கள்       பின்னோக்கிக் காயும் அறிகுறிகள் தோன்றும். கொம்புகளில் தாக்கப்பட்டு பின் இலைகளில்       பரவி அதன் மூலம் இலைக்காம்புகள் வரை பரவும்
 
                  - தாக்கப்பட்ட கிளைகளில்       இலைகள் இல்லாமல் காணப்படும் அல்லது கிளையின் முனைகளில் மட்டும் இளம் இலைகள் தென்படும்.       கொம்புகளின் மேல் நோய் பரவுவதால் பூ மொட்டும் பாதிக்கப்படுகின்றத,
 
                  - அதிகம் மற்றும்       தொடர் மழை பொழியும் காலங்களில் பூ மொட்டுகள் உதிர்ந்துவிடும்
 
                 
               
              கட்டுப்பாடு: 
              
                
                  - 0.25%காப்பர்       ஆக்ஸில் க்ளோரைட்டை ஒரு மாத கால இடைவெளியில் தெளித்தால் நோயின் செறிவு, இலை       உதிர்தல் மற்றும் பூ மொட்டு உதிர்தலை தவிர்க்கலாம்
 
                  - ஆரம்பத்தில் தெளிக்கும்       தெளிப்பான் பூ மொட்டு உருவாவதற்கும் இதை தொடர்ந்து பூ மொட்டுக்களை அறுவடை செய்யும்       வரை தொடர வேண்டும்.
 
                 
               
             |